tamilnadu

தஞ்சை அருகே போலி மருத்துவர் கைது

 தஞ்சாவூர், மார்ச் 10- தஞ்சை அருகே மெலட்டூர் மெயின் ரோட்டில் வைரம் மருத்துவமனை வைத்து நடத்தி வந்தவர் சுந்தரம் (வயது 48). இவர் கடந்த 20 ஆண்டுகளாக இங்கு கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார். நோயாளிகளுக்கு அலோபதி மருந்துகள் (ஆங்கில மருத்துவம்) பரிந்துரை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார்.  இந்நிலையில் இவர் மருத்துவம் படிக்கா மல் போலியாக மருத்துவமனை வைத்து நடத்து வதாக மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனருக்கு புகார் வந்தது. இதையடுத்து திங்கள்கிழமை மதியம் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ராணி தலை மையில், கும்பகோணம் சரக மருந்து கட்டுப் பாட்டு ஆணையர் சுதர்சன் உள்ளிட்ட சுகாதா ரப் பணிகள் துறை அலுவலர்கள் சுந்தரம் கிளினிக்கில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.  அப்போது சுந்தரம் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்ததுடன் ஏராளமான நோயாளிகள் அவரிடம் வைத்தியம் பார்க்க காத்திருந்தனர். இந்நிலையில் சோதனை நடத்திய அலுவலர்கள் குழு சுந்தரத்திடம் மருத்துவம் படித்ததற்கான சான்றிதழ் எதுவும் இல்லை என்பதை கண்டுபிடித்தனர். மேலும் போலியாக மருத்துவர் என கூறிக்கொண்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுந்தரத்தை மெலட்டூர் காவல் நிலையத்தில் சுகாதாரப் பணிகள் குழுவினர் ஒப்படைத்தனர். மேலும் இணை இயக்குனர் ராணி அளித்த புகாரின் பேரில் போலி டாக்டர் சுந்தரம் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.