tamilnadu

img

பேராவூரணி: ரயில்வே பாலப் பணியை விரைவுபடுத்திடக் கோரிக்கை

தஞ்சாவூர், நவ.1- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூர ணியில் புதிய பேருந்து நிலையம் அருகில் நீலகண்டபுரம் செல்லும் ரயில்வே கேட்(எல்.சி எண்.121) நூற்றாண்டு காலமாகப் புழக்கத் தில் இருந்த இந்த ரயில்வே கேட்டை காரைக்குடி திருவாரூர் அகல ரயில் பாதை சீரமைப்பின் போது நிரந்த ரமாக மூடுவதாக ரயில்வேத் துறை முடிவு செய்தது. இதை எதிர்த்து இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக செல்லக் கூடிய கிரா மங்களான கழனிவாசல், கொர ட்டூர், சோழகனார்வயல், ஆதனூர், மணக்காடு என 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு கட்ட போரா ட்டங்கள் நடத்தினர். ரயில்வே உப யோகிப்பாளர்கள் கூட்டமைப்பு ஏற்படுத்தி அதன் மூலம் மத்திய, மாநில அமைச்சர்கள் ரயில்வேத் துறை அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ., ஆட்சியர் என பலரையும் சந்தித்து ரயில்வே கேட்டை மூடா மல் இருக்க பல்வேறு போராட்ட ங்கள் நடத்தினர். இறுதி கட்டமாக எம்பி திருச்சி சிவா சந்தித்து ரயில்வே உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து இதற்கு மாற்று வழியான ரயில்வே கீழ் பாலம் அமைக்க வழிவகை செய்து ரயில்வே உயர் அதிகாரிகளும் அதற்கு ஒப்புதல் தெரிவித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலை தொடங்கப்பட்டது.  அப்போது டெமோ ரயில் வாரத்திற்கு திங்கள், வியாழன் ஆகிய இரு தினங்கள் இயக்கப் பட்ட நிலையில் இந்த ரயில்வே கேட் பாலம் அமைக்கும் பணியினை வியாழக்கிழமை வேலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் வேலையை முடித்து ரயில் செல்லும் பாதையை சீரமைத்து மேம்பாலம் அமைக்கப்பட்டு மூன்று தினங்களில் ரயில் இயக்கப்பட்டது.  மேம்பாலம் அமைக்கப்பட்ட நிலையில் அதனை உபயோ கப்படுத்துகிற 30 க்கும் மேற்பட்ட கிராமங்கள் செல்லக் கூடிய கீழ் செல்லும் பாதை அமைக்க ஒன்றரை வருடமாகியும், இன்னும் வேலை முடியாத நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூட முடியாத நிலையிலும், அவசர நிலையில் செல்லக்கூடிய வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை வாகனங்கள் உள்ளேயே செல்ல முடியாத நிலையில் இப்பகுதிக்கு செல்ல இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றி வரும் நிலை உள்ளது.  ஆனால் இன்று வரை வேலை முழுமையடையாமல் உள்ளதால் இப்பகுதியில் வசிக்கும் 500 குடும்பங்கள் மற்றும் பொது மக்கள், இவ்வழியாக செல்லக் கூடிய குடியிருப்பு வாசிகள் மாணவ, மாணவியர்கள், விவசாயி கள் மற்றும் இந்த ரயில்வே பாலம் அருகே இருக்கும் மருத்துவ மனைக்கு செல்லக் கூடிய நோயா ளிகள் இவ்வழியாக செல்லக் கூடிய 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெகு தூரம் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.  இதன் அருகே மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆலயமாக ஸ்ரீ நீல கண்ட பிள்ளையார் கோவில் உள்ளது. அங்கு இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்ற போது தேர் சுற்றி வரும் பாதையின் அருகே கீழ் பாலம் கீழ்பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் அவசர கதியில் இருபுறமும் பக்கவாட்டு சுவர் எழுப்பப்பட்டு பாதி அளவே கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. கிடப்பில் போடப்பட்டு போடப்பட்டு வேலைகள் நடைபெற்று வருவ தால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளா கின்றனர்.  இப்போது மழைக் காலம் தொ டங்கிய நிலையில் இந்த ரயில்வே கீழ் பாலம் முழுவதும் தண்ணீரால் நிரம்பி குளம் போல் காட்சி அளிக்கிறது போக்குவரத்திற்கு மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட அருகதையற்ற வழியாக உள்ளது. எனவே இந்த ரயில்வே கீழ் பாலம் வேலையை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இல்லையெனில் ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் மற்றும் பேராவூரணி பொது மக்கள் இப்பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ரயில் மறியல் போராட்டம் நடத்தப் படும் என தெரிவித்துள்ளனர்.