tamilnadu

img

சாலையில் குப்பைகளை எரிப்பதால் மக்கள் அவதி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி பகுதிகளில் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் தீ வைத்து எரிப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  பேராவூரணி சேது சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளி அருகிலும், போக்குவரத்து கழக பணிமனை எதிரில் உள்ள அரசினர் மாணவியர் விடுதி முன்பாக உள்ள குப்பைகளை எரிப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். குப்பைகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் தடுக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.