tamilnadu

மாவடுகுறிச்சி ஊராட்சியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி  

தஞ்சாவூர். ஜூலை 14- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், மாவடுகுறிச்சி ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 60  ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி  அமைப்பதற்கான பூமிபூஜை, அடிக்கல் நாட்டு விழா செவ்வா ய்க்கிழமை நடைபெற்றது.  ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் பழனிவேல் வேண்டு கோளை ஏற்று, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவி ந்தராசு இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்தார். இதன்மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடு ம்பங்கள் பயனடைவர். நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலை வர் அமிர்தம் பழனிவேல் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் சடையப்பன், தவமணி முன்னிலை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு அடிக்கல் நாட்டி விழா வைத் தொடங்கி வைத்தார்.