tamilnadu

img

சிறுபான்மை நலக்குழு கருத்தரங்கு

தஞ்சாவூர், அக்.3- தஞ்சாவூரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தஞ்சை மாநகரக் கிளை சார்பில்,  காந்தி  யடிகளின் 150 ஆவது பிறந்தநாள் விழா தஞ்சை மேற்கு எல்லையம்மன் கோவில் லாலி ஹால் அருகில் புதன்கிழமை நடைபெற்றது.  மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி நடைபெற்ற கருத்தரங்கிற்கு தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நல குழு மாநகர தலைவர் ஹெச்.அப்துல் நசீர் தலைமை வகித்தார். சிபிஎம் மாந கரச் செயலாளர் என்.குருசாமி முன்னிலை வகி த்தார். சி.ராமு வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், இஸ்லாமிய ஆராய்ச்சி மையம் எஸ்.உம ர்முக்தார், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்லக்குழு மாவட்ட தலைவர் பி. செந்தி ல்குமார், சிறப்புரையாற்றினர். நிறைவாக எல்.அலெக்சாண்டர் நன்றி கூறினார்.