tamilnadu

மினி வேன் கவிழ்ந்து இருவர் பலி  

தஞ்சாவூர், பிப்.23- தஞ்சாவூர் அருகே காத்தாடிப்பட்டி யைச் சேர்ந்த ராஜராஜசோழன் (25), வெற்றிச்செல்வன் (17), மதி (35), மாதவன் (17), கல்விராயன்பேட்டையைச் சேர்ந்த துரைராஜ் (20) ஆகியோர் மினி வேனில் சென்ற போது அது கட்டுப் பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், பலத்தக் காயமடைந்த 5 பேரும் தஞ்சாவூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். இவர் களில் ராஜராஜசோழன், துரைராஜ் சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனர். விபத்து குறித்து தஞ்சாவூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள கல்வி ராயன்பேட்டையைச் சேர்ந்த ஓட்டுநர் மணியை தேடி வருகின்றனர்.

;