tamilnadu

மாதர் சங்க போராட்டம் வெற்றி நுண்கடன் நிதி நிறுவனங்களுக்கு தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 20- கடனைச் செலுத்தச் சொல்லி வீடுகளுக்கே சென்று தொந்தரவு செய்யும் நிதி நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என  தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:  கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் மக்க ளின் சிரமத்தை கருத்தில் கொண்டும், மக்களின் நலன் கருதியும், நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில், வங்கிகளில் இருந்து பெறப் பட்ட கடனுக்காக மாதம்தோ றும் செலுத்த வேண்டிய தவ ணைத் தொகையை 3 மாத காலத்திற்கு ஒத்திவைக்க இந்திய ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.  நமது மாவட்டத்தில் மக்களின் இடர்பாடுகளை அறிந்து நுண் நிதி நிறு வனங்களில் செலுத்த வேண்டிய மாத கடன் தவ ணைத் தொகையை (ஜூன் 1  முதல் ஆகஸ்ட் 31 வரை) மூன்று மாத காலத்திற்கு வசூல் செய்வதைத் தவிர்க்கு மாறு நுண் நிதி நிறுவ னங்கள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனன.

 இந்நிலையில் நுண்நிதி நிறுவனங்கள் தவணைத் தொ கையை வசூல் செய்வதற் காக, கடன் பெற்றவர்கள் வீட்டிற்கு சென்று கடனைச்  கட்டச் சொல்லி சிரமப்ப டுத்தக் கூடாது. ஏதேனும் புகார் தெரிவிக்கப்பட்டால் மீறுவோர் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். விருப் பத்தின் பெயரில் கடனை திருப்பி செலுத்துவோர் தங்க ளுடைய கிளைகளிலேயே பணத்தை செலுத்தலாம். நுண் நிதி நிறுவனங்கள் கடன்  தொகையை செலுத் தாதவர்களிடம் கடுமையான வசூல் செய்யும் முறையை  கைவிடுமாறு அறிவுறுத்தப் படுகின்றனர்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதர் சங்க போராட்டம் வெற்றி
பெண்கள் குழுவுக்கு ஆதரவாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அரசு அறிவிப்பை மீறும் நுண்  கடன் நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தும் திருவி டைமருதூர் உள்ளிட்ட பல இடங்களில் காத்திருப்புப் போ ராட்டம் செய்தனர். அந்த ந்தப் பகுதி அதிகாரிகள் நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மாதர் சங்க போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனாலும் மாதர் சங்க மாவட்ட குழு தஞ்சை மாவட்ட ஆட்சியரை தொ டர்ந்து சந்தித்து அடாவடி யாக வசூல் செய்யும்  நுண் கடன் நிறுவனங்கள் மீது  துரித நடவடிக்கை எடுக்கு மாறு வலியுறுத்தியது. மாதர் சங்க கோரிக்கையை ஏற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் நுண் கடன் நிறுவனங்களுக்கு எச்ச ரிக்கை விடுத்துள்ளார். இந்த  அறிவிப்பை போராடி தந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.