tamilnadu

தஞ்சாவூர், புதுக்கோட்டை , அரியலூர் முக்கிய செய்திகள்

தஞ்சை, பூதலூரில் குடிமராமத்துப் பணிகள் ஆய்வு
தஞ்சாவூர், ஜூலை 31- தஞ்சாவூர் வட்டம், கல்விராயன்பேட்டை கிராமம், சக்கரா வாய்க்கால் கீழ்குமுழியை குடிமராமத்து திட்டத்தின் கீழ் கல்விராய்பேட்டை பாசனத்தாரர்கள் சங்கத்தின் மூலம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், பூதலூர் வட்டம், மாரனேரி கிராமத்தில் குடி மராமத்து திட்டத்தின் கீழ் அய்யனார் ஏரியை ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியின் கீழ் 4 தலைப்பு மதகுகள் தூர்வாரும் பணி, வருவாய் துறையின் சார்பில் நீர் பிடிப்பு பகுதிகளை அளவிடும் பணிகளை பார்வையிட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் மற்றும் மீட்கப்பட்ட இடங்கள் குறித்து துல்லியமான விவரங்களை வருவாய் பதிவேடுகளில் பதிவு செய்ய வருவாய் துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் எடுக்கப்படும் மண்ணை விவசாயப் பயன்பாட்டிற்கு விவசாயிகள் உப யோகப்படுத்திக் கொள்ளலாம் என விவசாயிகளிடம் தெரி வித்தார்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை
தஞ்சாவூர், ஜூலை 31- பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைய தலைமுறை யினரை பாதிக்கும் பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பல்வேறு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தடையை மீறி திருட்டுத்தனமாக பேராவூரணி கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் பலரும் பாதிக்கப்படுவதாகவும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யருக்கு புகார்கள் அனுப்பப்பட்டன.  இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ரவீந்திரன் உள்ளிட்ட சுகா தாரத் துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர்.  பெட்டிக்கடை, மொத்த விற்பனைக் கடை என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு ரூ.3,300 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அழிக்கப் பட்டு, விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த னர்.

பொன்னமராவதியில் மருத்துவ தின விழா
பொன்னமராவதி, ஜூலை 31 -  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள வலையப்பட்டி பாப்பா ஆச்சி அரசு மருத்துவமனை, காரையூர், பொன்னமராவதி, கொப்பனா பட்டி, மேலைச்சிவபுரி, அம்மன் குறிச்சி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்டத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாள் விழா நினைவாக அனைத்து மருத்துவமனையிலும் மருத்து வர் தின விழா கொண்டாடப்பட்டது.  இதன் ஒருபகுதியாக, பொன்னமராவதி ஒன்றியம் காரையூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்கு நர் மரு.பரணிதரன், பொன்னமராவதி வட்டாட்சியர் பால கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் தாய்-சேய் நலம் குறித்தும் மகப்பேறு நிதி உதவித் தொகை குறித்தும், கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனையும், நடமாடும் மருத்துவ குழு சேவைகள் பற்றியும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் வழங்கப்படும் அனைத்து மருத்துவ சேவைகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. மேலும் 30 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. பின்னர் சிறப்பாக பணியாற்றிய சுகாதார பணி யாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினர்.

காலமானார்
அரியலூர், ஜூலை 31 -  அரியலூர் நகராட்சி பகுதியில் சடையப்பர் தெருவில் வசித்து வந்த ப.செல்லம்மாள், வயது மூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு இயற்கை எய்தி னார். இவர் சிஐடியு அரியலூர்-பெரம்பலூர் மாவட்டச் செய லாளர் டி.துரைசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் சுப்ரமணியன் ஆகியோரின் தாயார் ஆவார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஆர்.மணிவேல், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.மகாராஜன், சிஐடியு சிற்றம்பலம், கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகஸ்டின், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.மீனா, பி.பத்மாவதி, சவுரிராஜன், ஒன்றிய செயலாளர்கள் எம்.வெங்கடாச்சலம், ஏ.புனிதன், கந்தசாமி, வி.பரமசிவம், அருணன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.