தஞ்சாவூர், பிப்.6- எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை எல்ஐசி அலுவலக வாயிலில் வேலை நிறுத்தம் செய்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பட்டுக்கோட்டை கிளைத் தலை வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் சம்பத் முன்னிலை வகித்தார். லிகாய் முகவர் சங்க மாநிலத் தலைவர் பூவலிங்கம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். முதல் நிலை அதிகாரிகள் சங்க பொறுப்பாளர் அருண்குமார் தாமோ தரன், உயர்நிலை முதன்மை அதிகாரி கள் சங்கம் ராதாகிருஷ்ணன், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் சின்னசாமி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். காப்பீட்டு கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட இணை செயலாளர் விஜயகுமார் விளக்கிப் பேசினார். நிறைவாக கிளை பிரதிநிதி நீலாய தாட்சி நன்றி கூறினார்.