tamilnadu

img

‘குடந்தையை கொண்டாடுவோம்’ மக்கள் கலை இலக்கிய விழா

கும்பகோணம், ஜூலை 20- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கும்பகோணம் கிளை சார்பாக குடந்தையை கொண்டாடுவோம் மக்கள் கலை இலக்கிய விழா வெள்ளி அன்று விடிய விடிய கிராமிய நடனங்கள் உடன் பட்டி மன்றம் கவிதை மழை, உரை வீச்சோடு கொண்டாட்டத்துடன் கும்பகோணம் எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு நூற்றாண்டு விழா நினைவரங்கத்தில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கிய விழாவை கும்பகோணம் மகாமக குளக்கரையில் இருந்து நகரத் தலைவர் ஆனந்தசய னன் தலைமையில் மாநிலக் குழு உறுப்பினர் முருக சரவணன் துவக்கிட பறையாட்டம் கலைப் தலை பேரணி புறப்பட்டு கலை கொண்டாட்டம் துவங்கியது. விழாவிற்கு மாவட்ட தலைவர் சா.ஜீவபாரதி தலைமை ஏற்றார். ராஜகோபாலன் அன்புமணி இதய ராஜா ராஜா சேகர் பக்கிரி சாமி வெங்கடேசன் சரவணன் மேலை நீலமேகம் சாமிநாதன் தமிழ்ச்செல்வி அப்துல் ரகுமான் மூர்த்தி செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்த னர். நகர செயலாளர் அசோக்குமார் வரவேற்றார்.  நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் விஜயகுமார் துவக்கி வைத்திட சென்னை மாற்று ஊடகம் காளீஸ்வ ரன் குழுவினரின் பறை ஆட்டம் சிலம் பாட்டம் கரகாட்டம் காவடியாட்டம் மயி லாட்டம் போன்ற கிராமிய கலைகள் மற்றும் கரிசல்குயில் கிருஷ்ணசாமி குழுவினரின் கிராமிய இன்னிசை மழை பொழிந்தது சிரிக்கவும் சிந் திக்கவும் நையாண்டி தர்பார் சின்னத் திரை புகழ் புதுகை பூபாளம் குழு வினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வல்லம் தாஜ்மகால் அனந்தசயனன் செருகுடி செந்தில் பிரேமா ஆகியோர் கவிதைகளை வாசித்தனர்.  நாட்டின் பிக்பாஸ் அரசா? மக்களா? என்ற தலைப்பில் கவிஞர்  மதுக்கூர் ராமலிங்கம் நடுவராகவும், அரசு என்று கவிஞர் கண்ணதாசன், கவிஞர் கண் ணகி மக்களே என்று இலக்கிய தோழன், குடந்தை ராஜலட்சுமி ஆகி யோர் இன்றைய அரசியல் சூழ்நிலை யை விளக்கி நகைச்சுவையுடன் பட்டி மன்றம் நடைபெற்றது.  கரிச்சான் குஞ்சு நினைவலைகளை பேராசிரியர் அ.மார்க்ஸ் உரையாற்றி னார். குடந்தை எழுத்தாளுமைகள் என்ற தலைப்பில் தமுஎகச மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்த லாலா, குடந்தையும் தொன்மையின் உண்மை என்ற தலைப்பில் மாநில துணை பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன் ஆகியோர் உரை நடை பெற்றது.  கலை நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டி யில் வெற்றி பெற்ற பள்ளி மாண வர்களுக்கு பரிசளிப்பு கும்பகோணத் தில் சிறப்பு சேர்க்கும் சிற்பிகள் கவி ஞர்கள் நடிகர்கள் துப்புரவு பணியா ளர்கள் நெசவு தொழிலாளி ஆகி யோர்களை கௌரவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழா நிகழ்வு களை சோ.சண்முகம் தொகுத்து வழங்கிட விழா முடிவில் கே.பக்கிரி சாமி நன்றியுரை ஆற்றினார். விழா வில் பொதுமக்கள் மாணவர்கள் ஆசி ரியர்கள் என ஏராளமான கலை ஆர்வ லர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்வை விடிய விடிய கண்டு ரசித்த னர்.