tamilnadu

img

தஞ்சை விமானப்படை தளத்தில்  எஸ்யூ 30 ரக போர் விமானம் ஜனவரியில் அறிமுகம்

 தஞ்சாவூர்: தஞ்சையில், உள்ள விமானப்படை நிலையத்திற்கு, தென்னக விமானப் படை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் அமித் திவாரி திங்கட்கிழமை அன்று வருகை தந்தார்.  தென்னக விமானப்படையில் முதன்மை விமானப்படை தளமான தஞ்சைக்கு வருகை தந்த தலைமைத் தளபதியை, நிலைய அணித் தலைவர் பிரஜூல் சிங் வரவேற்றார். தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. பின்னர் தலைமை தளபதி அமித் திவாரி விமானப்படை ஊழியர்களிடையே பேசினார். தொடர்ந்து நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார்.  தஞ்சை விமானப்படை நிலையத்தில் எஸ்யூ- 30 ரக போர் விமானம் ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப் படுவதாகவும், அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தென் மண்டலத்தில் இம்மையம் முதன்மை போர்ப்படைத் தளமாக வளர்ச்சி அடைந்து வருவதற்கும் பாராட்டு தெரிவித்தார்.  தலைமை தளபதியுடன் வந்திருந்த மண்டல வான்படை மனைவியர் சங்க தலைவர் பூனம் திவாரியை, தஞ்சாவூர் விமானப்படை நிலைய மனைவியர் சங்க தலைவர் வந்தனாசிங் வரவேற்றார்.

;