கும்பகோணம், மே 24- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதி நொடி யூர் கிராமத்தில் எட்டாம் வகுப்பு 13 வயது மாணவி வித்தியா கூட்டு பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டம் திருவிடைமரு தூர் தெற்கு ஒன்றியம் மாணவர் சங்கம் சார்பில் ஆரியச்சேரி கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திரு விடைமருதூர் தெற்கு ஒன்றிய தலைவர் கௌசல்யா தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட மாணவர் சங்க பொறுப்பாளர் கீர்த்தனா கண்டன உரையாற்றி னார். சுபா, ஷீலா, இலக்கியா உள்ளிட்ட மாணவர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்ட னர். மாணவியின் கொலைக்கு காரணமான குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடுமையான தண் டனை வழங்க வேண்டும். கொலை செய்யப்பட்ட மாணவி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.