தஞ்சாவூர், அக்.13- மனநலம் பாதிக்க ப்பட்டவர்களையும் மீட்க அனைவரும் முன்வர வேண்டும் என தஞ்சாவூர் மா வட்ட சட்டப் பணிகள் ஆணை க்குழுவினர் செயலாளரும் சார்பு நீதிபதியுமான பி.சுதா கேட்டுக்கொண்டார். தஞ்சாவூர் நீதி மன்ற வளாகத்தில் வியா ழக்கிழமை அன்று உலக மன நலம் பாதிக்கப்பட்டோர் தின த்தை முன்னிட்டு சிறப்பு கரு த்தரங்கம் நடைபெற்றது. கரு த்தரங்கிற்கு சட்ட தன்னா ர்வ தொண்டர் கே.சரளா வர வேற்றார். மகிளா நீதி மன்ற நீதிபதி எம்.எழில ரசி, கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் எஸ்.ரவிச்சந்தி ரன், மாவட்ட மாற்றுத்திற னாளிகள் மறுவாழ்வு அலு வலர் எஸ்.ரவீந்திரன், மனநல மருத்துவர் மங்கையர்கரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் செய லாளரும் சார்பு நீதிபதியுமான பி.சுதா பேசியதாவது: உலக மருத்துவக் குழுவினரால் 1992 -ம் ஆண்டு முதல் அக்.10ம் நாளை உலக மனநலம் பாதிக்கப்பட்டோர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் நோக்கம், ஆதர வற்ற நிலையில் சாலை யில் மனநலம் பாதிக்கப்ப ட்டவர்கள் திரியும் போது அவர்களை மீட்டு அவர்க ளுக்கு உரிய மருத்துவ சிகி ச்சை அளிப்பது தான். எந்த நோக்கமும் இல்லா மல் மனநலம் பாதிக்கப்பட்டு திரிபவர்களை பார்த்தால் அவர்களை கண்டறிந்து மீட்டு உரிய மருத்துவ சிகி ச்சை அளித்து அவர்களை மீண்டும் மனிதர்களாக மாற்ற முன்வர வேண்டும். அதற்காக தான் இது போன்ற விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 மனம் நலம் பாதிக்கப்பட்ட வர்களை மீட்டு அதில் சிலரை மருத்துவமனைக்கும், காப்பகத்துக்கும், மூவரை அவர்களுடைய குடும்பத்தி னரிடமும் தன்னார்வ அமை ப்புகளால் ஒப்படைக்கப்ப ட்டுள்ளது என்றார். இதில் அன்பாலயம் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பி னர், அடைக்கலமாதா கல்லூரி சமூகப்பணி மாணவ ர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.