tamilnadu

img

ஜே.சி.குமரப்பா பள்ளி 100% தேர்ச்சி

தஞ்சாவூர், ஏப்.20-பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மொத்தம் 221 பேர் ப்ளஸ்டூ பொது தேர்வெழுதினர். இதில் 221 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 100 ஆகும். 600 மதிப்பெண்களுக்கு 582 பெற்று மாணவி பூமிகா தமிழ்துரை முதலிடமும், 558 மதிப்பெண்களுடன் மாணவி ஜி.பூமிகா இரண்டாமிடமும், 548 மதிப்பெண்கள் பெற்று மாணவிகள் திவ்யப்ரியா, கீதப்பிரேமி மூன்றாமிடமும் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் முனைவர் ஸ்ரீதர், பள்ளி முதல்வர் சுரேஷ், அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், அஸ்வின்ஸ்ரீதர், பிரியதர்ஷினி, மற்றும் பெற்றோர் - ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வெற்றி பெற்ற மாணவர்களையும் அதற்கு வழிகாட்டிய ஆசிரியர்களையும் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

;