tamilnadu

ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குடிநீர் இணைப்பு பெற மக்களிடம் வைப்பு தொகை செலுத்த நிர்ப்பந்தம்

தஞ்சாவூர், ஜூலை 18- ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission) ஊரகப் பகுதியில் அனைத்து குடும்பங்க ளுக்கும், வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கள் ( Functional Household Tape Connections) வழங்குவதற்காக இத்திட் டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப் படுகிறது. திட்டம் நல்ல குறிக்கோளை கொண்டிருந்தாலும், இத்திட்டத்தின் செயலாக்கத்திற்கு வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பார்க்கும் போது  ஏழை, எளிய மக்களுக்கு ஆபத்தான அம்சங்கள் இதில் அடங்கியிருப்பதை காண லாம். இத்திட்டம் அமலுக்கு வரும் போது ஊரக பகுதிகளில் இலவச குடிநீர் வழங்குவதும், பொது குழாயடி குடிநீர் இணைப்புகளும் (Public Tap) இருக்காது. அனைவரும் வைப்புத் தொகை (குறைந்த பட்சம் ரூபாய் ஆயிரம்) மற்றும் மாதாந்திர கட்டணம் (குறைந்தபட்சம் ரூ.50) செலுத்தியே குடிநீர் பெற முடியும். மேலும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்காக மேற்கொள்ளப்படும் கட்ட மைப்பு பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டில் (அதாவது புதிய ஆழ்குழாய் கிணறுகள், மேல்நிலை தொட்டிகள், குழாய்கள் அமைத் தல் உள்ளிட்ட பணிகளுக்கான செலவு கள்) 10 சதவீதத் தொகையினை அந்த ஊரா ட்சியின் பொது மக்கள் வழங்கிட வேண்டும்.

உதாரணமாக 500 குடும்பங்கள், வீடுகள் உள்ள ஒரு ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்காக ஒரு கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டால் அதில் ரூ.10 லட்சத்தை பொதுமக்கள் பங்களிப்பாக வழங்கிட வேண்டும். ஒவ்வொரு குடும்ப மும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். மீதத் தொகை ரூ 90 லட்சத்தை மத்திய மாநில அரசுகள் 50:50 என்ற விகி தத்தில் வழங்கும்.  ஊராட்சிகளில் வைப்புத் தொகை மற்றும் கட்டணம் செலுத்தாமல் குடிநீர் இணைப்புகள் அமைத்துள்ள வீடுகளை கண்டறிந்து உடனடியாக வைப்புத் தொகையினை பெற்று முறைப்படுத்திட வேண்டும் என ஜல் ஜீவன் மிஷன் இயக்கு நரும், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரும் வழங்கியுள்ள அறிவுரைகளை தொடர்ந்து  ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களும், ஊராட்சி பணியாளர்களும் வைப்புத் தொகையினை கெடுபிடி செய்து வசூலிக்க தொடங்கியுள்ளனர். கொரோனா காலத்தில் வருமானத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களை குடிநீர் இணைப்பிற்கான வைப்பு தொகையினை செலுத்திட நிர்ப்பந் தம் செய்வதை கைவிட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.