கும்பகோணம், ஜூலை 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு உறுப்பினர் தரு மையன் தலைமையில் நடைபெற்றது. அதில் 2019 ஆகஸ்ட் 15, 16 ,17 இல் தஞ்சையில் நடைபெறும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டிற்கு ஒன்றியம் சார்பாக 10 வாகனங்களில் 300 பேர் கலந்து கொண்டு சிறப்பிப்பது. திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள ஆறு, குளம், பாசன வாய்க்கால்களை போர்க்கால அடிப்படை யில் தூர்வார வேண்டும் என்று அரசை வலியுறுத்தி தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது மேலும் பெரப்பாடி ஆற்று பாலம் உடைந்து 3 ஆண்டு ஆகியும் புதிய பாலம் கட்டாமல் இருப்பதால் பொதுமக்கள் குடவாசல் அரசு மருத்துவ மனைக்கு செல்லக் கூடிய நோயாளிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதே போல் பருத்திச் சேரி குடமுருட்டி ஆற்றின் குறுக்கே பொதுமக்களால் தற்காலிகமாக கட்டப்பட்ட மர பாலம் உடைந்து விட்டது. புதிய காங்கிரீட் பாலம் கட்டவும் கீரனூர் ஆற்றுப்பாலம் பழுதடைந்ததால் அரசு புதிய பாலம் கட்டிடவும் துக்காச்சி- கூகூர் குறுக்கு மண் சாலையை தார் சாலையாக அமைத்திட வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் எஸ்.பழனிவேல் உட்பட ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.