தஞ்சாவூர், ஆக.21- ஒரத்தநாட்டில் வீட்டில் திருட வந்த கொள்ளையனை தாக்கிப் பிடித்த தம்பதியினரை பலரும் பாராட்டி வரு கின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு திரெளபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனியப்பன்(61), கடலை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி இந்திரா(50), மகன் குமரேசன் ஆகிய மூவரும், திங்கள்கிழமை புதுக் கோட்டை மாவட்டம் பெருங்கலூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, மீண்டும் செவ்வாய்க் கிழமை அதிகாலை 5.30 மணிக்கு வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் வெளிப்புறத்தின் கிரில்கேட் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பழனியப்பன் உடைக்கப்பட்ட கதவை திறந்து உள்ளே செல்ல முயன்ற போது, வீட்டிற் குள் இருந்து மர்ம நபர் ஒருவர் சுதா ரித்து வெளியே வேகமாக ஓடி வந் துள்ளான். தன்னை பிடிக்க முயன்ற பழனியப்பனை, கீழே தள்ளிவிட்டு கொள்ளையன் வெளியே தப்பியோட முயன்றான். இந்நிலையில் அங்கு வீட்டு வாச லில் நின்ற இந்திரா, ஓடி வந்த கொள்ளை யனை மூக்கில் கையால் ஓங்கி குத்தி யுள்ளார். இதில் நிலை குலைந்த அவன் தடுமாறினான். இதையடுத்து பழனி யப்பன், இந்திரா மற்றும் குமேரசன் ஆகிய மூவரும் கொள்ளையனை பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ள னர். அதனைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் திரண்டனர். மேலும் அவ னிடம் இருந்த சுத்தியல், கம்பி உள் ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து பழனியப்பன் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம், ஒரு தங்கச் செயின் உள்ளிட் டவற்றை கொள்ளையன் எடுத்த நிலை யில், அவனிடமிருந்து அதையும் கைப் பற்றினார். இதையடுத்து ஒரத்தநாடு காவல் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஒரத்தநாடு காவல் துறை உதவி ஆய்வாளர் விஜய் கிருஷ்ணா கொள்ளையனிடம் பிடித்த விசாரணை நடத்தியதில், தஞ்சையைச் சேர்ந்த ராஜேந்திரன்(57) என்பது தெரி யவந்தது. அத்துடன் 4 பேருடன் சேர்ந்து திருட வந்ததாகவும், முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்ததால், தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கடையம் பகு தியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்தி மற்றும் அரிவாளுடன் தம்பதியை தாக்கிய கொள்ளையர்களை தைரி யமாக விரட்டியடித்தது போல, தற்போது ஒரத்தநாட்டில் கொள்ளை யனை தாக்கிப் பிடித்த தம்பதிகளுக்கு காவல்துறையினரும், பொதுமக்க ளும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.