tamilnadu

img

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஆக.29- தமிழ்நாடு தொலைதொடர்பு துறையில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் தராமல் மிகவும் சிரமத்தில் ஊழியர்கள் இருந்து வருகிறார்கள்.  அரசு உடனடியாக சம்பளத்தை வழங்க கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் சார்பில் கும்பகோணம் போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்க துணை செயலாளர் ராஜ்குமார் தலைமை ஏற்றார். துணைத் தலைவர் பி.அழகிரிசாமி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் திருநாவுக்கரசு, சங்க பொறுப்பாளர்கள் சத்யராஜ், சசிதரன் உள்ளிட்ட அரசு போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.