tamilnadu

img

இடிந்து விழும் நிலையில் உள்ள மெலட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.40 லட்சத்தில் பராமரிப்பு பணியா?

கும்பகோணம்,  ஜூலை 29- தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் தாலுகாவில் உள்ளது மெலட்டூர் பேரூராட்சி. இங்கு  அரசு ஆரம்ப சுகாதார நிலை யம் கடந்த 50 வருடத்திற்கு மேலாக செயல்பட்டு வரு கிறது. இங்கு உள்ள ஆர ம்ப சுகாதார நிலைய மரு த்துவமனை கட்டிடங்கள் அனைத்துமே இடிந்து விழும் நிலையில், கட்டிட சுவர்க ளின் உள் மற்றும் வெளிப்பு றங்களில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுப் பணித்துறைத் அதிகாரிகள் இருமுறை மரு த்துவமனை கட்டிடங்களை ஆய்வு செய்ததில் கட்டி டங்கள் அனைத்துமே உறுதி யற்ற நிலையில் உள்ளதாக வும், இனி கட்டிடங்களை  பயன்படுத்த வேண்டாம் எனவும், பயன்படுத்தினால் கட்டிடம் இடிந்து விழ க்கூடிய ஆபத்து ஏற்பட லாம் எனவும் தெரி வித்துவிட்டனர். மருத்துவமனை கட்டி டங்கள் சேதமடைந்தது குறித்து பலமுறை பத்திரிகை களில் செய்தி வந்துள்ள நிலையில் புதிய கட்டி டங்கள் கட்டப்படும் என எதி ர்பார்த்து காத்திருந்த கிராம மக்களுக்கும், மருத்து வமனை ஊழியர்களுக்கும் மெலட்டூர் அரசு ஆரம்ப சுகா தார நிலையத்திற்கு ரூ.40 லட்சத்தில் மராமத்து பணி என்ற அதிர்ச்சி தகவல் வெளி யாகி உள்ளது. இடிந்து விழப்போகும் கட்டிடங்களுக்கு சிமெண்ட் காரை பூசுவது, வர்ணம் அடி ப்பதால் எந்த   பலனும் இருக்காது. ஏற்கனவே பல முறை சிமெண்ட் காரை கள் பெயர்ந்து விழுந்த தில் மருத்துவர் உள்பட மரு த்துவமனை ஊழியர்கள் பலரும் காயமடைந்துள்ள னர். விரைவில் மருத்துவ மனை  கட்டிடங்கள் அனை த்தையும் இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட  வேண்டுமென இப்பகுதி பொ துமக்கள், மருத்துவமனை ஊழியர்கள் எதிர்பார்க்கின்ற னர்.