100 குடிநீர் மோட்டார்கள் பறிமுதல்
அறந்தாங்கி, மே 30-அறந்தாங்கி நகராட்சி பகுதி குடிநீர் விநியோக குழாய்களில் சட்டவிரோதமாக மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சப்படுவது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதுவரை 100 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள் ளன. தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மின் மோட்டார் பறிமுதல் செய்து குடிநீர் இணைப்புதுண்டிப்பு செய்து அபராதம் விதித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையர் அறிவித்துள்ளார். மேலும் தற்போது கோடை வறட்சி காரணமாக குடிநீரைசிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு
தஞ்சாவூர், மே 30-தஞ்சாவூர் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வருவாய் தீர்வாயஅலுவலரும், முத்திரைத்தாள் கட்டணம் தனித்துணை ஆட்சியருமான அ.கமலக்கண்ணன், வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி ஆகியோருடன் வருகைப் பதிவேடு மற்றும்பணிகள் குறித்து ஆட்சியர் இரவு 8 மணி வரை ஆய்வுமற்றும் ஆலோசனை நடத்தினார். ஆய்வில் தேர்தல் பிரிவுதுணை வட்டாட்சியர் யுவராஜ், வருவாய் ஆய்வாளர்கள் அஷ்ரப் அலி, சுப்பிரமணியன், ஜோதி, பாண்டியராஜன் உடனிருந்தனர்.
பெருமகளூர் கிராமங்களில் ஜமாபந்தி
தஞ்சாவூர், மே30-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்தில் வருவாய் தீர்வாய கணக்குகள் முடிப்பு(ஜமாபந்தி) நிகழ்ச்சிவியாழக்கிழமை தொடங்கியது. பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் தீர்வாய அலுவலரும், முத்திரைத்தாள் கட்டணம் தனித்துணை ஆட்சியருமான கமலக்கண்ணன் தலைமை வகித்துஜமாபந்தியை தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி முன்னிலை வகித்தார். பெருமகளூர் சரகத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய கணக்குகள் தணிக்கை நடைபெற்றது. நிகழ்வில் வட்ட வழங்கல் அலுவலர் ஏ.வில்சன், தனிவட்டாட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் ஆர்.ரமேஷ், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் சாலை, குடிநீர் வசதி, பட்டாமாறுதல், முதியோர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்தனர்.