tamilnadu

img

பாலப் பணியின் போது ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

  கும்பகோணம், ஜூன் 11- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா விற்கு உட்பட்ட திருவிடைமருதூர் ஒன்றியம், கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அரசலாற்றில் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் பாலப்பணியின் போது மண்ணில் இருந்து சுமார் 8 அங்குலம் உயரமும், 1 கிலோ எடையும் உள்ள ஒரு ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட பழ மையான ஐம்பொன் உலோகத்திலான அம்மன் சிலையை கும்பகோணம் வட்டாட்சியரிடம் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர் மலர்ச் செல்வி சிவகுமாரால் ஒப்படைக்கப்பட்டது.