தஞ்சாவூர், மே 25- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்களில் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றுள்ளவர்களில், வட்டிச் சுமையினால் விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளாமல் உள்ள, ஒதுக்கீடுதாரர்க ளுக்கு மாதத் தவணை செலுத்தத் வறியதற்கான, அபராத வட்டி, முதலாக் கத்தின் மீதான வட்டி ஆகியன முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தில் மீதான வட்டியில் வருடத்திற்கு 5 மாத வட்டி மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து அரசு ஆணையிட்டுள்ளது. இச் சலுகை வரும் 30.9.2020 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். எனவே தகுதியான ஒதுக்கீடுதாரர்கள் தஞ்சாவூர் வீட்டுவசதி பிரிவு அலுவல கத்தை அணுகி, தங்களது ஒதுக்கீட்டிற்கான நிலுவைத் தொகையினை ஒரே தவணையில் செலுத்தி, விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளும்படி தஞ்சாவூர் வீட்டு வசதி பிரிவு செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.