tamilnadu

img

வெட்டுவாக்கோட்டையில் உயர்மட்ட பாலம் திறப்பு

 தஞ்சாவூர், ஆக.14- தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் அருகே வெட்டு வாக்கோட்டை ஊராட்சியில் ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலத்தை புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையிலிருந்து திறந்து வைத்தார்.  தமிழக அரசு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறை முகங்கள் துறை சார்பில், திருக்காட்டுப்பள்ளி - பட்டுக் கோட்டை சாலையில் பிரிந்து, கலிராயன்விடுதி செல்லும் சாலையில், நரியாற்றின் குறுக்கே, ரூ.2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டு, புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.  இதையொட்டி ஊரணிபுரம் அருகே உள்ள வெட்டு வாக்கோட்டை ஊராட்சி புதிய பாலம் அருகே நடைபெற்ற பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமை வகித்தார். அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் முன்னிலை வகித்த னர். நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் புதுக்கோட்டை கோட்டப் பொறியாளர் ஆர்.புகழேந்தி, உதவிக் கோட்டப் பொறியாளர் ஆண்ட்ரூஸ், உதவிப் பொறியாளர் ராஜதுரை மற்றும் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.