தஞ்சாவூர், ஜூன் 20- தஞ்சாவூர் மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சா வூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு மணல் குவாரிகளை தவிர்த்து, மற்ற இடங்களில் திருட்டுத்தனமாக மணல் எடுப்பது சட்டப்படி குற்றமாகும். இதனை மீறி மணல் கடத்திய 12 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒரு லாரி, இரண்டு டாடா ஏஸ் வண்டிகள், 9 மாட்டு வண்டிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சில நபர்கள் ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள தங்களது பட்டா நிலத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பெயரில் உரிய அனுமதி இல்லாமல் மணல் அள்ள அனுமதி அளிக் கும்பட்சத்தில், அந்நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் மணல் எடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சவுடு மண், கிராவல், குளத்து வண்டல் மண் எடுப்ப தற்கு பெற்ற அனுமதியின் மூலம் ஆற்று மணலை எடுப்பவர்க ளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.