தஞ்சாவூர், ஜூலை 23- காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற காவல் உதவி ஆய்வா ளர் பி.அனுராதாவுக்கு, தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை சார்பில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் வரவேற்று பேசினார். ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, தஞ்சா வூர் சரக காவல் துணைத் தலைவர் ஜெ.லோகநாதன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலை வர் வி.வரதராஜூ, தங்கம் வென்ற அனுராதாவை பாராட்டி பேசினார். விழாவில் காவல் துறை சார்பில் அனுராதாவை பாராட்டி ஊக்கப்பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.