tamilnadu

கோயில் மடத்தில் குடியிருப்போருக்கு பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு 

 தஞ்சாவூர் அக்.14- தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை ஆட்சியர் ஆ.அண்ணாதுரையை நேரில் சந்தித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி கள் தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.  அந்த மனுவில் கூறி யிருப்பதாவது, “திருவாய்ப் பாடி அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம், திருப்ப னந்தாள் மடம், திருவாவடு துறை ஆதீனம் ஆகியவற் றுக்கு சொந்தமான இடங்க ளில், குத்தகை செலுத்தி ஆயி ரக்கணக்கானோர் குடி யிருந்தும், விவசாயம் செய் தும் வருகிறோம். தமிழக அரசு அரசாணை எண்-318ன் அடிப்படையில் மனைப் பட்டா வழங்கி வருகிறது. இந்த நிறுவன நிலங்களை யும் சிறப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்து, குடியிருப் போர், விவசாயம் செய்வோ ருக்கும் பட்டா வழங்க வேண் டும்” என அதில் கூறப்பட் டுள்ளது.  அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண் ணன், மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், விவசாயி கள் சங்க திருப்பனந்தாள் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், விவசாயிகள் சங்க தஞ்சை ஒன்றியச் செயலாளர் சௌந்தரராஜன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன், சிபிஎம் ஒன்றி யக்குழு உறுப்பினர் சாமி நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.