tamilnadu

தொடர் போராட்டத்திலும் நோயாளிகளுக்காக ஷிப்டு முறையில் இயங்கும் அரசு மருத்துவர்கள்

கும்பகோணம், நவ.1- தஞ்சாவூர் மாவட்டம் குடந்தை தலைமை மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவிற்கு  சென்ற பொழுது மருத்துவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம் எனும் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. 25.10.19 முதலே டாக்டர்கள் கூடு தலாக நியமிக்கவும், பட்ட மேற் படிப்பு மருத்துவர்களுக்கு பணி யிடை கலந்தாய்வு, 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெறுகிறது. டாக்டர்கள் வேலைநிறுத்தம் நடக்கும் பொழுதே வெளி மற்றும் உள் நோயாளிகளுக்கும் பரிசோத னைகள் நடத்தப்பட்டு சிகிச்சைகள் நடைபெற்றன. அனைத்து டாக்டர்க ளும் வேலைநிறுத்தத்தில் இருந்தா லும் வருகைப் பதிவேட்டில் கைஒப்ப மிடாமல், ஊதியத்தை இழந்தும், அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை களுக்கு அஞ்சாமலும் தங்களுக்குள் ஏற்பாடுகள் செய்து கொண்டு ஷிப்டு  முறையில் நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கிறார் கள்.இவற்றை அறிந்த நோயாளிக ளும், பொதுமக்களும் வேலை நிறுத்தம் செய்யும் டாக்டர்களைப் பாராட்டுவதோடு தமிழ்நாடு அரசு, மக்கள் கோரிக்கைகளுக்காகப் போராடும் டாக்டர்கள் சங்க நிர்வாகி களை அழைத்துப் பேசி பிரச்சனைக ளைத் தீர்க்க வேண்டும் என்றனர். கும்பகோணத்தில் அரசு அதி காரியாக இருந்து ஓய்வு பெற்றவ ரும் அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளருமான ஆர். ராஜகோபாலன், ஓய்வூதியர் சங்க மும், அரசு ஊழியர் சங்கமும் தமிழக அரசிடம் இதையே கோரிக்கையாக வைக்கிறோம். தமிழக அரசிடம் அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தினை குடந்தை அரசு மருத்துவமனை வாயிலில் நடத்தி உள்ளோம்.  ஆகவே நியாயமான மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி மருத்துவர்கள் மன நிறைவோடு மக்களுக்கு சேவை யாற்ற வழிவகுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொண்டார்.