tamilnadu

img

வாய்க்கால்களில் மீன்பிடித்து வாழ்க்கையை நகர்த்தும் தொழிலாளர்கள்

தஞ்சாவூர், ஜன.2- தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி அருகே உள்ள காவிரி கிளை வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால்க ளில் கிடைக்கும் மீன்களை பிடித்து விற்று, அதில் கிடைக்கும் சொற்ப பணத்தில் ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வரு கின்றனர்.  தற்போது சில நாட்களுக்கு முன்பு பருவமழை தொடர்ந்து பெய்ததால், கல்லணையிலிருந்து கிளை வாய்க்கால் கள் மற்றும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது, குறைக் கப்பட்டுள்ளது. இதனால் கிளை வாய்க்காலில் முழங்கால் அளவே தண்ணீர் உள்ளது. இதில் ஆவணம் பகுதியைச் சேர்ந்த சில தொழிலாளர் கள் தூண்டில் போட்டும், வலைகளை பயன்படுத்தியும் மீன் பிடித்தனர்.  இதில் சுவையும், சத்தும், மருத்துவ குணமும் மிகுந்த அயிரை, கெளுத்தி, குரவை, ஜிலேபி மற்றும் சுவை மிகுந்த கெழுத்தை போன்ற மீன்கள் கிடைத்தன. பேராவூரணியை அடுத்த ஆவணம் பூசாரி தெருவைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் விரித்திருந்த வலை யில் 6 க்கும் மேற்பட்ட கெளுத்தி மீன்கள் சிக்கின.  இம்மீன்கள் ஒவ்வொன்றும் 800 கிராம் முதல் 1.5 கிலோ வரை எடை உள்ள தாக இருந்தது. சாதாரணமாக கிலோ 100 ரூபாய்க்கு இவ்வகை மீன்கள் விற்பனையாகும் எனக் கூறப்படுகிறது. இந்த மீன்களை மாங்காடு பகுதியைச் சேர்ந்த, விவசாயி முருகன் உள்ளிட் டோர் விரும்பி வாங்கிச் சென்றனர்.  இதுகுறித்து மீன்பிடித் தொழிலாளி சிதம்பரம் கூறுகையில், “காலை 5 மணி யிலிருந்து, கிளை வாய்க்காலில் சுமார் 2 கிலோ மீட்டர் சேற்றில் இறங்கி, அலைந்து நடந்து திரிந்து வலைவிரித்து, இன்றை க்கு 6 மீன்கள் கிடைத்தன. நேற்று அலைந்து 50 ரூபாய்க்கு கூட மீன் கிடைக்க வில்லை. ஒரு நாள் மீன் கிடைக்கும். ஒரு நாள் கிடைக்காமல் போய்விடும். இதைக் கொண்டு தான் குடும்பத்தை நடத்த வேண்டியிருக்கி றது.  சில நேரங்களில், குடித்து விட்டு உடைத்து மதுபாட்டில்களை சிலர் வாய்க்காலில் வீசிச் செல்வர். அது காலில் குத்தி காயம் ஏற்படும். வலி காரணமாக சில நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாது. கரையோரம் புதர்க ளில் கிடக்கும் விசப்பாம்புகளாலும் ஆபத்து ஏற்படும்” என்றார்.  விவசாயி முருகன் கூறுகையில்,” “சுவையும் சக்தியும் உடைய இந்த மீன்கள் மலிவு விலையில் கிடைப்பதால், இதனை விரும்பி வாங்கி செல்கிறேன். இந்த வழியாக வயலுக்கு வரும்போது அடிக்கடி மீன்களை வீட்டிற்கு வாங்கி செல்வது வழக்கம்” என்றார்.

;