tamilnadu

காய்ச்சல் கண்டறியும் முகாம்

தஞ்சாவூர், ஜூலை 25 - தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சைப்பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகள் மற்றும் பிராணவாயு கருவி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் வசிப்பிடம் அமைந்துள்ள பகுதிகளில் சுமார் 180 பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு 11,958 நபர்களுக்கு இதுவரை காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றார்.