tamilnadu

img

மின் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், அக்.20- மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்த ரம் செய்திட அறிவிப்பு வெளியிடாததைக் கண்டித்து, தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தஞ்சை மின் வட்டக்கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஏ.அதிதூத மைக்கேல் ராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பி.காணிக்கைராஜ், மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி, தஞ்சை கோட்டச் செயலாளர் பி.ரமேஷ், ஒப்பந்த ஊழியர் வளவ ராசு மற்றும் திரளான ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.

;