tamilnadu

img

வேலை நேரத்தை உயர்த்தாதே, நிவாரணம் வழங்கிடுக : சிஐடியு போராட்டம்

 கும்பகோணம், மே 14- எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தக் கூடாது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச் சட்டங்களை தளர்த்துவதை உடனே நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் நாடு தழுவிய போராட்டம் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தில் கும்ப கோணம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் சாலைப் போக்கு வரத்து சங்கச் செயலாளர் பா. பார்த்தசாரதி, ஆட்டோ சங்கர் கௌரவத் தலைவர் செந்தில்குமார், ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் அன்புமணி, திருபுவனத்தில் மாவட்ட துணைத்தலைவர் சா. ஜீவபாரதி, கும்பகோணம் விரைவு போக்குவரத்துக் கழக சிஐடியு மாவட்டப் பொருளாளர் கண்ணன், கும்பகோணத்தில் உள்ளாட்சி ஊழியர் சங்கம் மாவட்ட செயலா ளர் ஜேசுதாஸ், திருப்புவனம் கைத்தறி சங்கம் மாவட்ட தலைவர் நாகேந்திரன், திருபுவனம் கூட்டு றவு சங்க மாவட்ட தலைவர் சேகர், தாராசுரம் எவர்சில்வர் தொழிலாளர் சங்கத் தலைவர் ஏ.செல்வம், செய லாளர் எஸ்.வி.மணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட் டங்களில் ஏராளமான தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் 
தஞ்சையில், சிஐடியு மாநி லக்குழு உறுப்பினர் கே.கல்யாணி  தலைமையில் முறைசாரா தொழி லாளர்கள் போராட்டம் நடத்தினர். தஞ்சை விரைவுப் போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு கிளைத் தலைவர் எஸ்.செங்குட்டுவன், அரசுப் போக்குவரத்துக் கழக தஞ்சை நகர் கிளையில், கிளைத் தலைவர் எஸ்.ராமசாமி, தஞ்சை புறநகர் கிளையில், கிளைத் தலை வர் காரல் மார்க்ஸ், தஞ்சாவூர் ஆட்டோ சங்கம் சார்பில் கிளைச் செயலாளர் விஜயகுமார், தஞ்சை சுமைப்பணி சங்கம் சார்பில் செயலாளர் த.முருகேசன், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் செயலாளர் கே.பாலமுரு கன், திருவையாறில் எம்.மாரி யப்பன், பூதலூரில் இ.முஹம்மது சுல்தான், ஊரணிபுரத்தில் முரு கேசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் கண்டன உரையாற்றினார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பி.என்.பேர்நீதி ஆழ்வார், கே.அன்பு, சிபிஎம் மாநகரச் செயலாளர் என்.குருசாமி, தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் இ.திருநாவுக்கரசு, எஸ்.ராமசாமி, கே. முருகானந்தம், விரைவுப் போக்குவரத்து சங்கம் முருகேசன், குணசேகரன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.