tamilnadu

மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் விநியோகம்

 தஞ்சாவூர், அக்.13- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் சேதுபாவா சத்திரம் வட்டாரங்களில் விதை கிராமத் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் இடுபொருட்கள் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. பேராவூரணி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் தற்போது டிகேஎம்.13 சான்று விதைநெல் 1,500 கிலோவும், கோ.51 சான்று விதைநெல் 5,000 கிலோவும் இருப்பு வைக்கப் பட்டுள்ளது. அதே போல் குருவிக்கரம்பை வேளாண் விரி வாக்க மையத்தில் டிகேஎம்.13 சான்று விதைநெல் 1,500 கிலோ வும், கோ.51 சான்று விதைநெல் 5,000 கிலோவும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.  விதைநெல் வேண்டும் விவசாயிகள் ஆதார் அட்டை நகலுடன் விண்ணப்பத்தினை சமர்ப்பித்து விதைநெல் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் 1 ஏக்கருக்கு 20 கிலோ விதை நெல் மட்டுமே வழங்கப்படும். ஆகவே இதுவரை நாற்றங்கால் விடாத விவசாயிகள் உடனடியாக விதை நெல்லைப் பெற்று காலத்தில் நாற்றங்கால் அமைத்து சாகுபடி பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதே போல் 50 சதவீத மானிய விலையில் நெல் நுண்ணூட் டம் மற்றும் திரவ வடிவிலான உயிர் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் மேற்காணும் இடு பொருட்களை மானிய விலையில் பெற்று பயிருக்கு இட்டு உயரிய மகசூல் பெற்றிட பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.