தஞ்சாவூர், ஜன.23- மத்திய அரசின் மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற் காக விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் பொருட்டு விண்ணப்பங்கள் சேகரிக்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலு வலகங்கள் மற்றும் அனைத்து சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அலுவல கங்களில், ஜனவரி 27 முதல் 31-ஆம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் சேகரிக்கும் முகாம் நடைபெற உள்ளது. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்- 2, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வரு மான வரி அடையாள அட்டை நகல்கள் (பான் கார்டு) இவற்றுடன் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட அலுவலகங்களில் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலகம், அறை எண்-14 பிளாக்-3, தரைத்தளம், ஆட்சியர் அலுவலக வளா கம். தஞ்சாவூர்- 613010, 04362236791-ல் தொடர்பு கொள்ளலாம். ஏற்கனவே இணையதளம் மூலமாக விண்ணப்பித்தவர்கள் மற்றும் ஏற்கனவே இது தொடர்பான விண்ணப்பத்தவர்கள் மீண்டும் விண்ணப்பம் அளிக்க வேண்டியதில்லை. நேரில் வர முடி யாத மாற்றுத்திறனாளியின் கையொப்பம் அல்லது கைவிரல் ரேகை பெற்று பாது காவலர் வரலாம். http://www.swavalambancard.gov.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப் பிக்கலாம் என ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.