tamilnadu

img

தேவனாஞ்சேரி தோழர் குருசாமி படத்திறப்பு

கும்பகோணம், பிப்.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒன்றி யம் தேவனாஞ்சேரி கிளை செயலாள ரும் விவசாய சங்க ஒன்றிய துணைச் செயலாளருமான ஐ.குருசாமி  மறை வையொட்டி அவரது உருவப் படத் திறப்பு நிகழ்ச்சி திருநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜேசுதாஸ் தலைமை வகித்தார். தோழர் குருசாமியின் உருவப் படத்தை மாநிலக் குழு உறுப்பினர் என். சீனி வாசன் திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோ கரன், சின்னை. பாண்டியன் சி.ஜெய பால், அருளரசன், மாவட்டக்குழு சி.நாக ராஜன், சா.ஜீவபாரதி, நகர செயலாளர் செந்தில்குமார், திருநல்லூர் ஊராட்சி தலைவர் மரகதம், சாமிநாதன், எல்ஐசி ஊழியர் சங்க பொறுப்பாளர் சேகர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என். கணேசன், ஆர். நாகமுத்து, குணசேக ரன், செல்வமணி, சுதாகரன், தட்சிணா மூர்த்தி மற்றும் தோழர் குருசாமியின் சகோதரர்கள் ஐ. சுப்பிரமணியன், ஐ.கலியபெருமாள், அன்பழகன் ஆகியோர் புகழ் அஞ்சலி செலுத்தினர்.

;