tamilnadu

img

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், பிப்.4- எல்ஐசி பங்கை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து தஞ்சை மாவட்டம் கும்பகோ ணம் எல்ஐசி ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தி ற்கு கும்பகோணம் கிளை தலை வர் சுரேஷ் தலைமை தாங்கினார். கோட்ட சங்க துணை தலைவர் சுப்ரமணியன், இணைச் செயலா ளர் சேகர், வளர்ச்சி அதிகாரி கள் சங்க தலைவர் ராஜேந்திரன், முகவர் சங்க தலைவர் குழந்தை வேல், கிளை செயலாளர்பு ரு ஷோத்தமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.ஐ.சி கிளை அனைத்து சங்க ஊழி யர்கள், அலுவலர்கள், அறந்தாங்கி கிளை அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் செய்தனர். காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் தலைவர் டி, நாகராஜன் தலைமையில் செயலாளர் என் செந்தில்குமார் முன்னிலையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை முதல்நிலை அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் 
எல்ஐசி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து தஞ்சாவூர் எல்.ஐ.சி கோட்ட அலுவலகம் முன்பு அனைத்து சங்கங்கள், அனைத்து நிலை அலுவலர்கள், அதிகாரிகள், ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காப்பீட்டு கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்டத் தலைவர் சே. செல்வராஜ் தலைமை வகித்தார். தஞ்சை கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வ.சேதுராமன், எல்.ஐ.சி முதல் நிலை அதிகாரிகள் சங்க பொ துச்செயலாளர் உஷா, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு துணைத் தலைவர் இரா. புண்ணியமூர்த்தி, எல்ஐசி முகவர் சங்கம் மாநிலச் செயலா ளர் ராஜா, எல்ஐசி வளர்ச்சி அதி காரிகள் சங்கம் நூர்பாஷா பேசினர்.
திருச்சி 
மின்வாரிய அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தென்னூரில் உள்ள திருச்சி மின்வாரிய தலைமை பொறியா ளர் அலுவலகம் முன் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் ரெங்க ராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி ஐக்கிய சங்க திட்ட செயலாளர் ராஜ மாணிக்கம், தொழிலாளர் சம்மே ளன திட்டத்தலைவர் சிவச்செல் வன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட செய லாளர் செல்வராஜ், திட்ட பொரு ளாளர் இருதயராஜ் பேசினர். சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் ராமர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட நிர்வாகிகள் வி.கே.ராஜேந்திரன், ஜெயபால், செல்வி, மணிகண்டன், மணிமா றன், ராமச்சந்திரன், செல்வராஜ், வீரமுத்து, சந்திரன், பக்ருதீன் பாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், முதல் நிலை அதிகாரிகள் சங்கம், வளர்ச்சி அதி காரிகள் சங்கம், எல்ஐசி முகவர் கள் சங்கம் சார்பில் எல்ஐசி திருச்சி கிளை யூனிட் 1 முன் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்க துணைத் தலைவர் ஜோன்ஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி முதல்நிலை அதிகாரிகள் சங்க தலைவர் கார்த்திகேயன், வளர்ச்சி அதிகாரிகள் சங்க தலைவர் ஆண்டோ, எல்ஐசி முகவர்கள் சங்க தென்மண்டல செயற்குழு உறுப்பினர் பொன்.வேலுச்சாமி, வடக்கு மண்டல செயற்குழு உறுப்பினர் திருநா வுக்கரசு பேசினர். தஞ்சை கோட்டம் அரிய லூரில் நடைபெற்ற எல்ஐசி ஊழி யர்கள் ஆர்ப்பாட்டம் சங்கத் தலை வர் எம். இராமலிங்கம் தலைமை யில் நடைபெற்றது. வி.முருகா னந்தம், என்.நீலமேகம் ஆர்.நெடுஞ்செழியன், டி.மாலதி, ஆர். ஜெயம், செல்லமுத்து, டி.இரவி, எஸ்.முருகேசன் முன்னிலை வகித்தனர். க.கிருஷ்ணன் (அரிய லூர் கிளை செயலாளர்), வி.அரு மைக்கண்ணு (ஜெயங்கொண் டம் கிளை செயலாளர்), ராம்ஜி (ஊழியர் சங்க செயலாளர்), நந்த குமார் (வளர்ச்சி அதிகாரிகள் சங்கம்), மணவாளன் (மூத்த வளர்ச்சி அதிகாரி), சந்திரகுமார் (முதல் நிலை அதிகாரிகள் சங்கம்), சிற்றம்பலம் (சிஐடியு மாவட்ட பொருளாளர்), துரை சாமி (செயலாளர்) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். நிறைவாக ஆறுமுகம் கோட்ட துணைத் தலைவர் நன்றி உரை நிகழ்த்தினார். முகவர்கள் சங்கம் ஊழியர்கள் சங்கம் அதி காரிகள் சங்கம் வளர்ச்சி அதிகா ரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
எல்ஐசி பங்குகளை தனியா ருக்கு விற்கும் முடிவைக் கண்டித்து புதுக்கோட்டை எல்ஐசி கிளை அலுவலகம் முன் பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் கிளைத் தலைவர் வி. லதாராணி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தஞ்சை கோட்டை துணைத் தலை வர் என்.கண்ணம்மாள், சிஐடியு சார்பில் எம்.ஜியாவுதீன், எல்ஐசி ஓய்வூயர் சங்கத தலைவர் எம். அசோகன், முதுநிலை அதிகாரி கள் சங்க நிர்வாகி வி.திருப்பதி, வளர்ச்சி அதிகாhகள் சங்கம் சார்பில் டொமினிக், முகவர் சங் கங்களின் சார்பில் தங்கவேல், அனைத்துத்துறை அரசு ஒய்வூதி யர் சங்கம் சார்பில் மு.முத்தை யா கருணாநிதி உள்ளிட்டோர் பேசினர். வீர.துரைசிங்கம் நன்றி கூறினார்.