tamilnadu

புத்தாடை அணியாமல் பண்டிகை கொண்டாட முடிவு

 கும்பகோணம், மே 24- கொரோனா ஊரடங்கு காரணமாக ரம்ஜான் பண்டிகை களையிழந்து காணப் படுகிறது. இந்நிலையில் முஸ்லிம் தலைமை ஹாஜி திங்கட்கிழமை ரம் ஜான் பண்டிகை ஷரிஅத் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி யான காவேரி டெல்டா பகுதியில் இவ்வரு டம் புத்தாடை அணியாமல் வீட்டிலேயே தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகை யை கொண்டாட முஸ்லிம்கள் முடிவு செய்துள்ளனர். எனினும் ரம்ஜானை முன்னிட்டு முக் கிய கடைகளை சில நிபந்தனைகளுடன் திறக்க மாநில அரசு உத்தரவிட்டிருந்த போதும், வரும் மே 31 ஆம் தேதி வரை ஒரு சில ஜவுளி கடைகளையும் திறப்ப தில்லை என வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் பரபரப்பாய் காணப்படும் கும்பகோணம் நகர பெரிய ஜவுளிக் கடைகள் திறக்கப்படாத நிலை யில் உள்ளன. பல கோடிகள் வர்த்தக நடை பெறும் இடம் வெறிச்சோடி காணப்படு கிறது.  மேலும் ஒரு சில சிறிய ஜவுளி கடை கள் திறந்தாலும் புதிய துணிகளை எடுக்க செல்லும் போது கொரோனா அச்சம் கார ணமாக இஸ்லாமிய ஜமாத்தார்கள் தவிர்த்து வருகின்றனர். தற்போது முஸ்லிம்களும் இதனை ஏற்று இவ்வரு டம் ரம்ஜான் பண்டிகையை புது ஆடை கள் அணியாத பண்டிகையாகவே ஒரு சில பகுதிகளில் இஸ்லாமியர்கள் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.