தஞ்சாவூர், ஜூலை 4- நுண்கடன் நிதி நிறுவனத்தின் கட்டாய வசூலைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அம்மாபேட்டை ஐடிஎப்சி கிராம விடியல் நிதி நிறுவனம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கொரோனா ஊரடங்கு கால த்தில், ஆகஸ்ட் 31 வரை பொது மக்களிடம் கட்டாய வசூல் செய்ய க்கூடாது என முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட போதிலும், அம்மாபேட்டையில் இயங்கும் ஐடிஎப்சி கிராம விடி யல் நிதி நிறுவனம், அதனை மீறி கட னைத் திருப்பிச் செலுத்தச் சொல்லி, பொதுமக்கள், சுய உதவிக் குழு க்களுக்கு தொந்தரவு அளித்து வரு கிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்ப ட்டுள்ள நிலையில், கடனைத் திரு ப்பிச் செலுத்த முடியாமல், அண்மை யில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டார். எனவே பொது மக்களுக்கு நெரு க்கடி ஏற்படுத்தி, தற்கொலைக்கு தூண்டும் நிதி நிறுவனங்களைக் கண்டித்தும், கட்டாய வசூலைக் கைவிட வேண்டும் என வலியு றுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்மாபேட்டை நகரச் செய லாளர் வி.ரவி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி கண்டன உரை யாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் முனியாண்டி, மயில்வாக னன் மற்றும் பலர் கலந்து கொண்ட னர். கட்டாய வசூல் தொடரும் பட்ச த்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் ஆர்ப்பாட்ட த்தில் அறிவிக்கப்பட்டது.
தரங்கம்பாடி
நாகை மாவட்டம் இலுப்பூர் கடைவீதி, ஆக்கூர் முக்கூட்டு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆக்கூர் முக்கூட்டில் வாலிபர் சங்க வட்டக்குழு உறுப்பி னர் கே.குணசேகரன், மாதர் சங்க வட்டத் தலைவர் சண்முகவள்ளி தலைமை வகித்தனர். மாதர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஜி.கலைச்செல்வி உள்ளிட்டோர் உரையாற்றினர். இலுப்பூர் கடைவீதியில் மாதர் சங்க வட்டச் செயலாளர் ராணி, வாலிபர் சங்க வட்ட பொருளாளர் சாமித்துரை தலைமை வகித்தனர். வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் சிங்காரவேலன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் வெண்ணிலா உள்ளிட்டோர் உரையாற்றினர்.