tamilnadu

img

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், நவ.3- தஞ்சாவூரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி யை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, சனிக்கிழமை தொடங்கி வைத்தார். மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி, அரசர் மேல்நிலைப்பள்ளி, வீரராகவா மேல்நிலைப்பள்ளி, தமிழ் பல்கலைக்கழகம், பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரி, செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.  பின்னர் மாணவ மாணவியர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் கண்கா ணிப்பாளர் மனோகரன், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆய்வுக்குழு அலுவலர் தவச்செல்வம், துணை ஆய்வு அலுவலர் கஜேந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.