கும்பகோணம், மார்ச் 19- கொரோனா வைரஸ் நோய் எதிரொலியாக மக்கள் நலன் கருதி தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை, பாபநாசம், சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடை பெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் வியாழனன்று வரை 28 நாட்களாக பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இரவு பகல் பாராமல் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. கொரோனா நோய்த் தொற்று இந்தியாவையும் தாக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தினை தற்காலிகமாக ஒத்திவைப்பதென தீர்மானிக்கப் பட்டுள்ளது.