தஞ்சாவூர், மார்ச் 8- தமிழக அரசு கொரோனா வைரசின் தாக்குதலில் இருந்து தஞ்சையைப் பாதுகாக்க போர்க் கால அடிப்படையில் முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட வி.தொ.ச கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து விதொச மாவட் டச் செயலாளர் கே.பக்கிரிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: “இந்திய மாநிலங்களில் எப்போதும் போல் கேரள மாநிலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை யில் முன்னிலையில் உள்ளது. தமி ழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தற் போது இல்லை. தஞ்சை பெரிய கோவிலுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்க ளில் கூடுதலாக வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணி களும் அதிகளவில் வருகின்ற னர். எனவே அரசும், சுகாதார துறையும் கூட்ட நெரிசல் உள்ள சுற்றுலா நகரமான தஞ்சையில் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும், மக்களை யும் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை தடுப்பு நட வடிக்கை எடுக்க வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டக் குழு கேட்டு கொள்கிறது”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.