தஞ்சாவூர், மார்ச் 17- கொரோனா வைரஸ் எதிரொலி யாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் வெறிச்சோடி கிடக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகள் அதிக ளவு வருகை தரும் சுற்றுலா தலங்களான மனோரா, கல்லணை, தஞ்சாவூர் தொல் காப்பியர் சதுக்கம், மணிமண்டபம், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மகால் நுாலகம், அரண்மனை கலைக்கூடம், மணி கோபுரம், மராட்டா தர்பார் ஹால் உள்ளிட்டவை மூடப்பட்டு பார்வையா ளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப் பட்டது. மேலும் தஞ்சை பெரிய கோவில், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வ ரர் கோவில் உள்ளிட்டவைகளில் மக்கள் குறைந்த அளவில் வருகை புரிந்தனர். அவர் களுக்கு, கொரோனா வைரஸ் விழிப்புணர் வை சுகாதாரத் துறையினர் ஏற்படுத்தினர்.