மன்னார்குடி, ஜுலை 29- மன்னார்குடி நகராட்சி ஆணையர் பொறு ப்பில் உள்ள நகராட்சி பொறியாளர் திருமலை வாசன் (50) மற்றும் சுகாதார ஆய்வாளர் பிர பாகரன் (30) இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மன்னார்குடி நகராட்சி அலுவலகம் மூடப்ப ட்டது. அறிகுறிகளை தொடர்ந்து நகராட்சி ஆணையருக்கும் சுகாதார ஆய்வாளருக்கும் திங்களன்று மன்னார்குடி நகர ஆரம்ப சுகா தார நிலையத்தால் கொரோனா பரிசோ தனை செய்யடப்பட்டு மாதிரிகள் திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்ட தாகவும் செவ்வாயன்று இரவு இரு வருக்குமான முடிவுகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் திரு வாரூர் மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு நிலைய தகவல்கள் தெரிவித்தன. இதனை தொடர்ந்து மன்னார்குடி நக ராட்சி புதனன்று முதல் மூடப்பட்டுள்ளது. நக ராட்சியின் அமைச்சுப் பணி நிர்வாக ஊழி யர்கள் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நகராட்சியின் இதர அலுவலர்கள் மற்றும் ஊழியர்க ளுக்கும் கொரானா பரிசோதனை விரைவில் செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரி விக்கின்றன.