தஞ்சாவூர், மே 9- ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ 15,000 கொரோனா நிவாரணமாக வழங்க வேண்டும். மூன்று மாத காலத்திற்கு தேவையான இலவச உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். ஊரடங்கு விதிமுறைக்கு உட்பட்டு ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், அத்தியாவசிய காரணம், அவசர தேவைகளுக்கு செல்லும் ஆட்டோக் களை காவல்துறை பிடிப்பதை கண்டித்தும், சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் தஞ்சை பாலாஜி நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கே. அன்பு, தா.செங்குட்டுவன், கே.பால முருகன், இ.பி.எஸ்.மூர்த்தி, ராம லிங்கம், ஆட்டோ சங்க நிர்வாகி கள் சாமிநாதன், ஜோதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல் திருபுவனம், திரு மங்கலக்குடி பகுதிகளில் ஆட்டோ தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சா.ஜீவபாரதி, திரு புவனம் சரவணகுமார், திருமங்க லக்குடி கே சரவணன், முஹம்மது பாரி, ஜோதி கருணாஸ் எஸ் புதூர் செல்வம், தினேஷ் உள்ளிட்டோர் கோரிக்கை பதாகைகளுடன் ஆர்ப் பாட்டம் நடத்தினர். மாவட்டத்தில் ஊரணிபுரம், செங்கிப்பட்டி, கும்பகோணம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்க ளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் சா.ஜீவபாரதி, பா.பார்த்தசாரதி, சிபிஎம் கும்பகோணம் நகரச் செய லாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் காமாட்சி அம்மன் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். பாலக்கரை கால்நடை மருத்துவ மனை ஆட்டோ ஸ்டாண்ட் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் சந்தி ரன் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன் சிறப்புரையாற்றினார். கோட்டை ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்ட் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்டாண்ட் தலைவர் தாஜூதீன் தலைமை வகித்தார்.
ஸ்டீல் தோப்பு ஆட்டோ ஸ்டாண்டில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு தென்னூர் பகுதி செயலாளர் அப்பாஸ் தலைமை வகித்தார். திருச்சி– மதுரை ரோட்டில் உள்ள வள்ளுவர் நகர் ஆட்டோ ஸ்டாண்ட் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி துணை செயலாளர் பஷிர் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜெய பால் சிறப்புரையாற்றினார். திரு வானைக்காவல் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு மாவட்ட பொருளாளர் அன்பு செல்வம் தலைமை வகித்தார். திருவெறும்பூர் ஆட்டோ ஸ்டாண்ட் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காட்டூர் சிஐடியு ஒருங்கிணைப்புகுழு கன்வீனர் பாலு தலைமை வகித்தார். காட்டூர், பால்பண்ணை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காட்டூர் பகுதி தலைவர் சரவணன் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க பகுதி செயலாளர் சார்லஸ் சிறப்புரை யாற்றினார்.
திருவாரூர்
சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் தங்கள் வீடுகளின் முன்பாக செங் கொடி ஏந்திக் கொண்டு மத்திய மாநில அரசுகளிடம் தங்கள் கோரிக் கைகளை முன்வைத்து முழக்க மிட்டனர். திருவாரூரில் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.கே.என்.அனிபா போராட்டத்தில் ஈடுபட்டார். மாவட்டத்தின் பல்வேறு இடங்க ளிலும் போராட்டம் நடைபெற்றது.