tamilnadu

ஊழியருக்கு கொரோனா ஒரத்தநாடு வட்டாட்சியர்  அலுவலகம் மூடல்

தஞ்சாவூர், ஜூலை 7- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவல கத்தில், தலைமை நில அளவையராகப் பணிபுரியும் 55  வயதுடைய ஒருவருக்கு, கடந்த சில நாட்களாக காய்ச்சலு டன் கூடிய உடல்நலக் கோளாறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபருக்கு கடந்த இரண்டாம் தேதி கொ ரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் சனிக்கி ழமை பரிசோதனை முடிவு வந்ததில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து அவர் உடனடியாக தஞ்சை மருத்துவக்க ல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நி லையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரத்தநாடு வட்டாட்சி யர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடை பெற்றது. திங்கள்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, அலுவலர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. அலுவலகம் பூட்டு  போடப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு பணிகளுக்காக வட்டாட்சியர் அலுவலகம் வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடை ந்து திரும்பினர்.