tamilnadu

img

ஒன்றியத் தலைவருக்கு வைத்தியலிங்கம் வாழ்த்து

தஞ்சாவூர், ஜன.31- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியக்குழுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினர், அதிமுக மாவட்டச் செயலாளரும், மாநி லங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  ஒத்திவைக்கப்பட்ட பேராவூரணி ஒன்றியக் குழு தலைவருக்கான மறை முகத் தேர்தல், வியாழக்கிழமை அன்று  பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் (முத்திரைத்தாள் கட்டண தனித்துணை ஆட்சியர்) அ.கமலக்கண்ணன் தலை மையில் நடைபெற்றது.  இதில் அதிமுக சார்பில் போட்டி யிட்ட சசிகலா ரவிசங்கர் வெற்றி பெற்றார். இதையடுத்து ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசி கலா ரவிசங்கர் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தஞ்சையில், அதிமுக மாவட்டச் செய லாளரும் மாநிலங்களவை உறுப்பின ருமான ஆர்.வைத்திலிங்கத்தை, ஒருங்கிணைந்த மாவட்ட கூட்டுறவு பால்வளத் தலைவர் ஆர்.காந்தி, முன்னாள் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பி னர்கள் பேராவூரணி மா.கோவிந்தராசு, பட்டுக்கோட்டை சி.வி.சேகர் ஆகியோர் முன்னிலையில், நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து, வெற்றி பெற்றதற்காக வாழ்த்து பெற்றனர்.  அப்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.திருஞான சம்பந்தம், முன்னாள் மாநில கயிறு வாரிய தலைவர் எஸ்.நீலகண்டன், ஒன்றியச் செயலாளர்கள் மதுக்கூர் துரை.செந்தில், ஒரத்தநாடு ரவிச் சந்திரன், பட்டுக்கோட்டை சுப்பிரமணி யன், சேதுபாவாசத்திரம் சிவ.மதி வாணன், பேராவூரணி உ.துரைமாணிக் கம், பட்டுக்கோட்டை நகரச் செயலா ளர் சுப.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றி யப் பெருந்தலைவர் விமலா கணேசன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ராமமூர்த்தி, பேராவூரணி தொகுதி இணைச் செயலாளர் பழனிச்சாமி, வட்டாத்திக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமுத்து, மாணவர் அணி நிர்வாகி கள் ஆர்.பி.ராஜேந்திரன், பொறியாளர் கோவி. இளங்கோ, எம்.எஸ்.நீல கண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  தொடர்ந்து பேராவூரணியில் அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாகச் சென்று ஒன்றிய பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஒன்றியக் குழு தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றி யதையடுத்து, அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

;