பண்ணை அடிமை குடும்பத்தில் பிறந்த தோழர் பி. எஸ். தனுஷ்கோடி எழுதப் படிக்கத் தெரியாதவர். தனுஷ்கோடி பண்ணை வேலைக்குப் போகாமல் மற்ற வாலிபர்களை யும் சேர்த்துக்கொண்டு சேரிப் பகுதிகளில் சீர் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வந்தார். தந்தை பெரியாரின் கருத்துக்களால் கவரப்பட்ட தோழர் தனுஷ்கோடி ராமசாமிக்கு 1942ல் ‘ஜனசக்தி’ நாளிதழின் அறிமுகம் ஏற்பட்டது. பண்ணை அடிமைக்கு எதிராகக் களம் கண்டு வந்த தோழர் பி. சீனிவாசராவைப் பற்றி அறிந்த தனுஷ்கோடி தம்மை செங்கொடி இயக்கத்தில் இணைத்துக்கொண்டார்.
தென்பரை இயக்கம், நாணலூர் கலவரம், நிலப்பிரபுக்களுக்கும் விவசாய சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட முதல் ஒப்பந்தம், சாட்டையடி சாணிப்பால் நிறுத்தம், வெண்மணி சம்பவம், என ஏராளமான நிகழ்வுகள் மற்றும் சிறைவாசம் என நெஞ்சை உருக்கும் பல்வேறு சம்பவங்களில் தனுஷ்கோடியின் அளப்பரிய பங்கு இருந்தது. 1964ல் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட போது தம்மை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு செயல்பட்டார். 1962ஆம் ஆண்டில் இந்திய சீன எல்லை மோதல் நடை பெற்ற போதும் 1975 ஆம் ஆண்டில் அவசரநிலை பிரகடனத்தின் போதும் தனுஷ்கோடி கைது செய்யப்பட்டார். அவரது வாழ்வில் 9 ஆண்டுகள் 9 மாதம் சிறைவாசம் அனுபவித்துள்ளார். ஓராண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தியுள்ளார்.
இவர் ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர், சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளில் அர்ப்ப ணிப்பு உணர்வுடன் இயங்கினார். “உங்கள் வாழ்க்கையில் எதை பெருமையாக கருதுகிறீர் கள்?” என கேட்டபோது “எழுதப்படிக்க தெரியாத பண்ணை அடிமையாக இருந்த என்னை வர்க்க உணர்வு பெற்ற மனிதனாக்கி மக்கள் ஊழிய னாக தலைநிமிரச் செய்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருப்பதையே பெருமைக்குரியதாக கருதுகிறேன்” என்றார். இத்தகைய தோழர் பி.எஸ். தனுஷ்கோடியின் வாழ்க்கை கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு முன்னுதா ரணமான வாழ்க்கை என்பதில் மிகையில்லை.
பெரணமல்லூர் சேகரன்