tamilnadu

மாற்றுத் திறனாளிகளுக்கு கணினி பயிற்றுநர் பணியிடம்  

தஞ்சாவூர், பிப்.15- மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் தொகுப்பூதிய அடிப்ப டையில் ஒரு கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கு மாதம் ரூ.15,000- என்ற தொகுப்பூதியத்தில் தற்காலிக பணியிடம் நிரப்பப்படவுள்ளது.   இப்பணிக்கு பி.எட்., கல்வித் தகுதியுடன் பி.இ (கம்ப்யூட்டர் சயின்ஸ்), பி.எஸ்.சி.,(கம்ப்யூட்டர் சயின்ஸ்), பி.சி.ஏ., பி.எஸ்.சி.,  (இன்பர்மேஷன் டெக்னாலஜி) இவற்றில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது உச்ச வரம்பு இல்லை.   விருப்பம் உள்ளோர் சுய விண்ணப்பத்து டன் கல்வி, சாதிச் சான்று, குடும்ப அட்டையின் நகல், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை யின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்- 2 ஆகியவற்றுடன் தலைமையாசிரியர், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி, மருத்துவக் கல்லூரி சாலை, மேம்பாலம், தஞ்சாவூர் - 613001 என்ற முகவரிக்கு வரும் 21-ம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் நேரில் அல்லது அஞ்சல் வாயி லாக கிடைக்கும்படி அனுப்பி வைத்திடுமாறு ஆட்சியர்  ம.கோவிந்தராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

;