கும்பகோணம், மே 19- கும்பகோணத்தில், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெயச் சந்திரன் தலைமையில் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு அறிவித்துள்ள கொரோனா முன்னெச்ச ரிக்கை தடுப்பு நடவடிக்கை விதிமுறை களை முழுமையாக கடைபிடித்து வணி கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. கூட்டத்தில் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு செயலாளர் வி.சத்தியநாராயணன், துணைச் செயலாளர் வேதம் வெ. முரளி, தமிழ்நாடு வர்த்தகர் நலக் கழக தலைவர் ந.கணேஷ், பொதுச்செயலா ளர்(பொ) இரா.முத்துராஜா, பொருளா ளர்(பொ) செ.சரவணன் பங்கேற்றனர்.