tamilnadu

கொரோனாவிற்காக ஒன்றிணைந்த வணிகர்கள் - ஆட்சியர் பாராட்டு

தஞ்சாவூர், ஜூலை 22-   தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. குறிப்பாக, கும்பகோணத்தில் கடந்த 10 நாள்களில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, கும்பகோணம் நகரத்தில் கடைகள், வணிக நிறு வனங்களின் நேரத்தை குறைக்க வணிகர்கள் முடிவு செய்து, செவ் வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி நேரம் வரை மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இதே போல, பட்டுக்கோட்டை நகரத்திலும் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த ஜூலை 19 முதல் ஜூலை 26 வரை பேராவூரணி தாலுகாவில் ஜூலை 22 முதல் மாலை 5 மணியில் இருந்து ஜூலை 31 வரை முழு நேர சுய ஊரடங்கு என வணிகர்கள் அறிவித்து செயல் படுத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை முதல் ஜூலை 31 வரை காலை 6 மணியி லிருந்து மாலை 4 மணி வரை மட்டுமே கடைகளை திறக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக வணிகர்கள் அறிவித்தனர். வணி கர்களின், செயல்பாடுகளுக்கு தஞ்சை ஆட்சியர் ம.கோவிந்தராவ் பாராட்டு தெரிவித்துள்ளார். வணி கர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில்,  டாஸ்மாக் கடைகளை யும் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.