tamilnadu

img

கால்நடை மருத்துவக் கல்லூரி விழா

தஞ்சாவூர், மார்ச் 8- தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ஏழாவது கல்லூரி மற்றும் விடுதி ஆண்டு விழா நடைபெற்றது.  விழாவிற்கு தமிழ்நாடு கால் நடை மருத்துவ அறிவியல் பல்க லைக் கழகத்தின் துணைவேந்தர் சி.பாலச்சந்திரன் தலைமை வகித்து பேசினார். சென்னை வணிக வரித்துறையின் இணை ஆணையர் சி.பழனி கல்லூரி ஆண்டு மலரை வெளியிட்டு, பல் வேறு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். கல்லூரி முதல்வர் தி. சிவ குமார் கல்லூரி ஆண்டறிக்கை யை வாசித்தார். விடுதிக் காப்பா ளர் சி.பாலகிருஷ்ணன் கல்லூரி விடுதி அறிக்கையை சமர்ப்பித் தார். முன்னதாக மாணவர் மன்ற துணைத்தலைவர் சி. பந்தேஸ்வ ரன் வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக இறுதியாண்டு மாண வர் எஸ்.இமானுவேல் ஜார்ஜ் நன்றி கூறினார்.